தாய்லாந்தின் பேங்கொக்கில் நேற்று (03) இரவு நடைபெற்ற பல தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான (BIMSTEC) வங்காள விரிகுடா அணுகுமுறையின் 6வது உச்சி மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டார்.
இந்த மாநாடு தாய்லாந்தின் பேங்கொக்கில் இன்று (4) நடைபெறவுள்ளதுடன், இதில் பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள ஸ்வர்ண பூமி விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் தாய்லாந்து சென்றடைந்தார்
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த ஆண்டுக்கான பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் கருப்பொருள் “செழிப்பு, நெகிழ்ச்சி மற்றும் திறந்த தன்மை” என்பதாகும்.