தற்போதைய இளம் தலைமுறையினரிடையே வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாகவுள்ளது. மேலும் குளிர்காலத்தில் வாசனைத் திரவியங்கள் இன்னும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் மறைந்திருக்கும் ஆபத்துகள் குறித்து யாரும் அறிந்திருப்பதில்லை.
வயது வித்தியாசமின்றி அனைவரும் வாசனைத் திரவியங்களை தினமும் பயன்படுத்தி வருகிறார்கள். வெளிநாட்டு வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதை பெருமையாகக் கருதுகின்றனர்.உடலில் உள்ள வாசனை ஈர்ப்பை அதிகரிப்பது போல, வாசனைத் திரவியத்தில் ஒரு பயங்கரமான ஆபத்து மறைந்திருக்கிறது.
ஆய்வாளர்களின் கருத்துபடி வாசனைத் திரவியங்களில் பித்தலேட்கள் போன்ற இரசாயனங்கள் உள்ளன. இந்த இரசாயனம் நெயில் பொலிஷ் மற்றும் கூந்தல் பராமரிப்புப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உணவு பொதியிடல் தயாரிப்பிலும் கூட பயன்படுத்தப்படுகிறது.
இந்த வேதிப்பொருள் இன்சுலின் எதிர்ப்பு, இதய நோய் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியைக் கூட பாதிக்கிறது. உடலில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். வாசனை திரவியங்களில் உள்ள இரசாயனங்கள் குழந்தைகளின் மூளையையும் பாதிக்கின்றன.
மேலும், உடலின் நாளமில்லா சுரப்பி அமைப்பிலும் பிரச்சனைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது இனப்பெருக்கத்தைப் பாதிக்கிறது. ஹோர்மோன், பிட்யூட்டரி, தைரொய்ட் மற்றும் மனநிலை ஊசலாட்டங்களும் ஏற்படலாம்.
நம்முடைய சிறிய மாற்றங்கள் மூலம் பெரிய இழப்புகளைத் தவிர்க்கலாம். இரசாயனங்கள் இல்லாத பொருட்களைப் பயன்படுத்துவதே சிறந்தது. இந்த மாற்றம் ஒரே நாளில் சாத்தியமில்லை. பழகுவதற்கு நீண்டகாலம் ஆகும். அதேபோல் துணிகளை துவைக்கும் போது வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பதும் நல்லது.