எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக இதுவரையில் 211 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது
அதன்படி, வன்முறை தொடர்பாக 45 முறைப்பாடுகளும், தேர்தல் சட்டமீறல் தொடர்பாக 166 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது
குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் 21 வேட்பாளர்களும் 70 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.