பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் அருகே நடந்த வெற்றிகொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இதனால் வெற்றி பேரணி சோகத்தில் முடிந்தது
இதுகுறித்து நீதவான் விசாரணைக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 இலட்சம் இழப்பீடும் அறிவித்து உள்ளது.
கப்பன் பார்க் பொலிஸ் நிலையத்தில் ஏ.எம்.வெங்கடேஷ் என்பவர் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு எதிராக பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில், முன்பே பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். உடன் சேர்த்து, விசாரணை நடத்த பரிசீலனை செய்யப்படும் என வெங்கடேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று கப்பன் பார்க் பொலிஸ் நிலையத்தில் கூடுதலாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.