ஆப்கானிஸ்தானில் இன்று (07) அதிகாலை 1.05 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது.
நிலநடுக்கம் 4.2 ரிச்டர் அளவில் பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் 126 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 36.50 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 67.82 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
முன்னதாக அதிகாலை 12.56 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில நிலநடுக்கங்களால் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இன்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.











