EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
தஞ்சம் புகுந்தவர்களிடம்  மோசடி செய்த மூவர்

தஞ்சம் புகுந்தவர்களிடம் மோசடி செய்த மூவர்

ஆனி 12, 2025
வகை: கியூபெக், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தில் தற்காலிக வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் தஞ்சம் புகுந்தவர்களைச் சுரண்டியதுடன் மற்றும் ஒரு வேலை விபத்தை மறைக்க முயன்ற மோசடி வலையமைப்பில் ஈடுபட்ட மூன்று நபர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு விசாரணையின் மூலம் இந்த மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தன.

இந்த மோசடி கியூபெக் மாகாணத்தின் தொழிலாளர் அமைச்சுக்கு எதிராக “இதுவரை செய்யப்பட்ட மிகப்பெரிய மோசடி” என்று அந்த அமைச்சு வர்ணித்துள்ளது.

இந்த நடவடிக்கையால் அரசுக்கு சுமார் $635,000 நட்டம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹெக்டர் ஹேர் ரொட்ரிகஸ் கொன்ட்ரெராஸ் (56), ஹெக்டர் லோபஸ் ராமோஸ் (51), மற்றும் பியாட்ரிஸ் அட்ரியானா குரேரோ முனோஸ் (45) ஆகியோர் இக்குற்றம் தொடர்பான சந்தேக நபர்களாக உள்ளனர்.

ஆரம்பத்தில் கியூபெக் மற்றும் கனேடிய மத்திய அரசாங்கங்களுக்கு எதிராக $5,000 க்கும் அதிகமான மோசடி மற்றும் $5,000 க்கும் அதிகமான மோசடிகளை முன்னெடுப்பதற்கான, சதி செய்ததாக இவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர்.

ரொட்ரிகஸ் கொன்ட்ரெராஸ் விசாரணை தொடங்குவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, ஏப்ரல் மாதம் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

ரொட்ரிகஸ் கொன்ட்ரெராஸ் தலைமையிலான இந்த மூவரும், வேலை அனுமதிப்பத்திரங்கள் இல்லாத தஞ்சம் புகுந்தவர்களை பணியமர்த்தும் பல தற்காலிக முகவர் நிலையங்களை நடத்தி வந்தனர்.

இந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக, பணமாகவோ அல்லது அவர்கள் வழங்கிய போலி அடையாளங்களில் அச்சிடப்பட்ட காசோலைகள் மூலமாகவோ பணம் வழங்கப்பட்டது.

குற்ற ஒப்புதலுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, ஊடக நிறுவனமொன்றின் விசாரணைக்குப் பின்னரே கியூபெக் மாகாணத்தின் தொழிலாளர் அமைச்சு இந்த தற்காலிக முகவர் நிலையங்கள் குறித்த விசாரணைகளைத் தொடங்கியது.

2018 இல் நடந்த விசாரணையின்போது, தஞ்சம் புகுந்த நபர் ஒருவர் மொன்றியல் மெட்ரோ நிலையத்தில் ஒரு மறைமுக தற்காலிக முகவர் வலையமைப்பால் பணியமர்த்தப்பட்டு, வேலை செய்யும் போது கடுமையாக காயமடைந்த சம்பவம் வெளிப்படுத்தப்பட்டது.

மொன்றியல் நகரத்திற்கு வெளியே உள்ள ஒரு இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் சட்டவிரோதமாக வேலை செய்ய, அவருக்கு ஒரு முன்னாள் தொழிலாளியின் பெயர் மற்றும் சமூக பாதுகாப்பு எண் வழங்கப்பட்டது.

அந்த வேலையைச் செய்யும் போது இறைச்சி வெட்டும் இயந்திரத்தால் அவரது கையின் மேற்பகுதி துண்டிக்கப்பட்டது.

அவசர அறுவை சிகிச்சையின் மூலம், அவரது தொடையில் இருந்து தோல் ஒட்டு (skin graft) எடுக்கப்பட்டு அவரது கை புனரமைக்கப்பட்டது.

எனினும், பல ஆண்டுகளுக்குப் பிறகும் தனக்கு வலிப்பதாக 39 வயதான அந்த நபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அவரை பணியமர்த்திய தற்காலிக முகவர் நிலையம், கியூபெக்கின் பணி சுகாதார மற்றும் பாதுகாப்பு சபைக்கு இந்த விபத்து குறித்து அறிவிக்கவில்லை.

இது தொடர்பான செய்தி வெளியாகியதன் பின்னர் அந்த சபை தலையிட்டு, நிறுவனத்தை அவருக்கு இழப்பீடு வழங்கும்படி கட்டாயப்படுத்திய பின்னரே இந்த விபத்து வெளிச்சத்திற்கு வந்தமை குறிப்பிடத் தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பொதுமக்களுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ள ஒன்ராறியோ மாகாண காவல்துறை
கனடா

பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஒன்ராறியோ மாகாண காவல்துறை

ஆடி 8, 2025
சமூக அபிவிருத்திக்காக  20 மில்லியன் டொலர் நிதியை  ஒதுக்கிய சஸ்காட்செவன் அரசு
கனடா

சமூக அபிவிருத்திக்காக 20 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கிய சஸ்காட்செவன் அரசு

ஆடி 8, 2025
பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிகரித்து வரும்  பாலின அடிப்படையிலான வன்முறை
கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிகரித்து வரும் பாலின அடிப்படையிலான வன்முறை

ஆடி 8, 2025
டிரம்பினால்  அறிவிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உள்ளடங்காத  கனடா
கனடா

டிரம்பினால் அறிவிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உள்ளடங்காத கனடா

ஆடி 8, 2025
வடக்கு லீஃப் ராப்பிட்ஸ் நகரை அச்சுறுத்தும் காட்டுத்தீ
கனடா

வடக்கு லீஃப் ராப்பிட்ஸ் நகரை அச்சுறுத்தும் காட்டுத்தீ

ஆடி 7, 2025
கியூபெக்கின் ஆர்சம்பால்ட் சிறைச்சாலையில் கைதி தப்பி ஓட்டம்
கனடா

கியூபெக்கின் ஆர்சம்பால்ட் சிறைச்சாலையில் கைதி தப்பி ஓட்டம்

ஆடி 7, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

வவுனியா வடக்கில் மகாவலி திட்டத்தின் கீழ் புதிதாக 350 ஏக்கர் நிலம் பறிபோகும் அபாயம்!

வவுனியா வடக்கில் மகாவலி திட்டத்தின் கீழ் புதிதாக 350 ஏக்கர் நிலம் பறிபோகும் அபாயம்!

4 நாட்கள் முன்னர்
ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி!

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி!

22 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியாவில் கயஸ் வாகனம் மோதி  முதியவர் பலி!

வவுனியாவில் கயஸ் வாகனம் மோதி முதியவர் பலி!

5 நாட்கள் முன்னர்
நண்பர்களுக்கிடையிலான வாய் தர்க்கம் கொலையில் முடிந்தது!

வெவ்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத மூவரின் சடலங்கள் மீட்பு!

6 நாட்கள் முன்னர்
நல்லூரில் விடுதிகளைப் பதிவு செய்தல் தொடர்பில் தவிசாளரின் அறிவிப்பு!

நல்லூரில் விடுதிகளைப் பதிவு செய்தல் தொடர்பில் தவிசாளரின் அறிவிப்பு!

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In