கிளிநொச்சி – இராமநாதபுரம் வயலூர் முருகன் ஆலய மாம்பழ திருவிழாவின் போது வைக்கப்பட்ட மாம்பழம் பல இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகின்ற நிலையில் ஆறாம் நாள் மாம்பழத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது, இடம்பெற்ற ஏல விற்பனையின் போது ஆறு இலட்சத்து நாற்பத்தையாயிரம் ரூபாவிற்கு (645,000) இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.











