மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு, ஆகிய கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் தாழ் நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெல்ல நிலைமையினை பார்வையிடுவதற்காக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், உதவித் தவிசாளர் மே.வினோராஜ் , பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையை கருத்தில்கொண்டு, வீதியை வெட்டி , பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய வெள்ள நீரை வழிந்தோட செய்யும் வகையில், JCB இயந்திரம் மூலம் பாதுகாப்பாக தற்காலிக கால்வாய்களால் நீர் வடிந்தோடச் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











