கியூபெக்கின் மருத்துவ நிபுணர்கள் கூட்டமைப்பு (FMSQ) கியூபெக் மாகாண அரசாங்கத்துடன் ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளது.
கியூபெக் மருத்துவர்கள் மீது இழப்பீட்டு முறையைத் திணிக்கும் புதிய சட்டமான ‘Bill 2’ என்று அழைக்கப்படும் சட்ட மசோதா 2-இல் உள்ள சர்ச்சைக்குரிய பிரிவு தொடர்பாகவே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட அந்த ‘Bill 2’ என்று அழைக்கப்படும் சட்டத்திற்கு எதிராக கியூபெக்கின் மருத்துவ நிபுணர்கள் கூட்டமைப்பு அவசரகால நீதிமன்றத் தடையைக் கோரியிருந்தது.
‘Bill 2’ சட்டமானது, கியூபெக் அரசாங்கத்தின் கொள்கையை எதிர்ப்பதற்காக, மாகாணத்தின் மருத்துவச் சேவையைத் தடுக்க அல்லது மெதுவாக்கவென, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருத்துவர்கள் “ஒருமித்த நடவடிக்கையில்” ஈடுபடுவதைத் தடைசெய்கிறது.
தற்போது, இந்த விடயம் தொடர்பில் கியூபெக் மாகாண அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் விளைவாக, தான் கோரிய அவசரகால நீதிமன்றத் தடையை, மருத்துவ நிபுணர்கள் கூட்டமைப்பு மீளப்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.






