வடக்கு சைப்ரஸின் கைரேனியா துறைமுகத்தில் இருந்து துருக்கியின் தாசுசு துறைமுகத்தை நோக்கி 270 பயணிகளுடன் புறப்பட்ட பிரம்மாண்ட பயணிகள் கப்பல், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கரைக்கு அருகே கடலில் கவிழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடுக்கடலில் திடீரென நீர் புகுந்து கப்பல் கவிழ்ந்ததை அடுத்து, துருக்கிய சைப்ரஸ் கடலோரக் காவல் படை உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது.
இப்போரட்டத்தில் இதுவரை 159 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கைரேனியா நகரின் மேயர் முராத் சென்குல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், கடலில் மாயமான மீதமுள்ள 99 பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்களைத் தேடும் பணி ஹெலிகாப்டர்கள் மற்றும் ரோந்துப் படகுகளின் உதவியுடன் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சம்பவம் நடந்த கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கடுமையான சூறாவளிக் காற்றும் மோசமான வானிலையும் நிலவி வந்ததே இந்த விபத்துக்கு முதன்மைக் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் கருதப்படுகிறது.
விபத்து குறித்த துல்லியமான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டு மீட்கப்பட்ட மக்களுக்கு அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.











