புது டில்லி கார் குண்டுவெடிப்பு நிகழ்த்திய தாக்குதல் தாரியான வைத்தியர் உமர் வெடிபொருட்களை சோதிக்க வீட்டில் ஆய்வகம் அமைத்து டில்லியில் குண்டு வெடிப்பு நடத்த சோதித்து பார்த்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில், பேர் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வந்த நிலையில், புல்வாமாவின் கோய்ல் கிராமத்தில் உள்ள உமரின் வீட்டில் பாதுகாப்பு படையினர் சோதனைக்குட்படுத்தினர்.
இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதுடன் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வெடிபொருட்களை சோதிக்க வீட்டில் ஆய்வகம் வைத்திருந்தமையும் டில்லி குண்டுவெடிப்புக்கு வீட்டிலேயே சோதித்து பார்த்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த நபரின் வீடு நேற்று முன்தினம் (14) நள்ளிரவு முழுமையாக வெடி வைத்து தகர்க்கப்பட்ட நிலையில் முழு வீடும் தரைமட்டமானதுடன், கட்டட இடிபாடுகளில் தடயவியல் துறையினர் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, நவம்பர் 8ம் திகதி முதல் 10ம் திகதி வரையான விசாரனையில், பரிதாபாத்தில் உள்ள இரண்டு தனித்தனி வீடுகளில் இருந்து 2,900 கிலோ எடையுள்ள வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






