புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கூமாங்குளம் கிராம அலுவலர் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க உட்பட அதிதிகள் அலுவலக கட்டடத்தை நாடாவெட்டி திறந்துவைத்தனர்.
கிராமசேவையாளர் என்.ஶ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், பிரதேசசபையின் தவிசாளர் பா.பாலேந்திரன்,மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள்,கிராமமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.











