கிரிப்டோகரன்சி தொழிலதிபர் கெவின் மிர்ஷாஹி (Kevin Mirshahi) கடத்தல் மற்றும் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று கூறப்படும் ஜோனி லெபேஜ் (Joanie Lepage) என்ற பெண்ணிற்கு மொன்ட்ரியல் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம், பழைய மொன்ட்ரியல் பகுதியில் உள்ள ஒரு சொகுசு குடியிருப்பில் இருந்து தொழிலதிபர் கெவின் மிர்ஷாஹி உட்பட நால்வர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர்.
மற்ற மூவர் 24 மணிநேரத்தில் விடுவிக்கப்பட்ட நிலையில், 25 வயதான கெவின் மட்டும் மாயமானார்.
பல மாதத் தேடுதலுக்குப் பிறகு, அக்டோபர் 30-ஆம் திகதி ஒரு பூங்காவில் அவரது உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்தக் கொடூரக் கொலையில் ஜோனி லெபேஜ் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்ததாக நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் தற்போது நீதிமன்ற
விசாரணையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.






