நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘முத்துமணி’ அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் திரையுலகப் பயணத்தில் 1540வது திரைப்படமாகும்.
முற்றிலும் புதுமையான ‘ராஜா டிரான்ஸ்’ பாணியில் அமைந்துள்ள இக்காதல் பாடலை இளையராஜாவே எழுதி, பிரபல பாடகி சுவேதா மோகனுடன் இணைந்து பாடியுள்ளார்.
இப்பாடலின் பிரத்யேக மியூசிக் வீடியோவை பாரத் முரளிதரன் இயக்கியுள்ளார்.
தம்மம் ஃபிலிம்ஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சனாந்த், ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் முதன்முறைத் திரையிடலுக்குத் தேர்வாகி சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ள இத்திரைப்படம், வரும் செப்டம்பர் 25 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.











