கனடாவில் காற்பந்து விளையாடியதன் பின்னர் ஒன்றுகூடியவர்கள் மீது இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இட்டாபிகொக்கில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ள அதேவேளை
குறித்த பகுதியில் மேலும் வேறு வேறு இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்






