வடக்கு எகிப்தில் இன்று காலை தீ விபத்தொன்று பதிவாகியுள்ளது. இவ்விபத்தானது ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்டுள்ளதுடன் இதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர் என எகிப்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கர்பியா கவர்னரேட்டில் உள்ள மஹல்லா அல் குப்ராவின் யமானி பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு 26 நோயாளர் காவு வண்டி அனுப்பப்பட்டுள்ளதுடன் காயமடைந்த 35 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு விசேட மருத்துவ குழுக்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த தீ விபத்து இடம்பெற்ற தொழிற்சாலையில் சிவில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதால், 15 நோயாளர் காவு வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
மேலும் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக எகிப்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.