கல்விப்பொதுதராதர சாதாரணதர பரீட்சைகள் எதிர்வரும் 6ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. மே 15 ம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் , செயலமர்வுகளை நடத்தவும், பரீட்சை தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை காட்சிப்படுத்தவும் இன்று (30) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் நிறைவடையும்வரை தடையுத்தரவு அமுலில் இருக்குமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. தடை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.





