இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் ராமாயணா திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாகத் தயாராகும் இத்திரைப்படத்தின் முதல் பாகம், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தில் ராமராக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், சீதையாக நடிகை சாய் பல்லவி மற்றும் ராவணனாக தென்னிந்திய நட்சத்திர நடிகர் யாஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முதல் பாகமானது ராமர் – சீதையின் வனவாச வாழ்க்கை மற்றும் ராவணனால் சீதை கடத்தப்படும் வரலாற்றுச் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான இதன் முன்னோட்டக் காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசை அமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
இந்திய மொழிகள் அனைத்திலும் மற்றும் சர்வதேச அளவில் ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.











