மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பண்டா தாலுகாவிற்கு உட்பட்ட கவ்கர், நவ்ராஜ் மற்றும் பராஜ் உள்ளிட்ட நான்கு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனர்.
சாராயம் குடித்த சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு கடுமையான தலைவலி, மயக்கம் மற்றும் தொடர் வாந்தி போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
நிலைமை மோசமடைந்ததையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.
இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும் சிகிச்சை பலனளிக்காமலும் இதுவரை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் 30 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கள்ளச்சாராயம் தயாரித்து விநியோகம் செய்த சமூக விரோதிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மாநில அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.











