மட்டக்களப்பு, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து கடமைக்கு பங்கம் விளைவித்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கடும் நிபந்தனைகளுடன் 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு கொண்ட சரீரப் பிணையில் நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தஷ்ஷினி இன்று வெள்ளிக்கிழமை (11) பிணையில் விடுவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 31ம் திகதி மட்டக்களப்பு சென்றல் வீதியில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் சுமணரட்ன தேரர் 4 பேருடன் நுழைந்து, அங்குள்ள அரசு ஊழியர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாதிக்கப்பட்ட அரச அதிகாரிகளால் மட்டக்ககளப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இதையடுத்து இது குறித்து வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையத்திற்கு கடந்த திங்கட்கிழமை (7) சென்றிருந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர். மட்டக்களப்பு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா தலைமையிலான பொலிஸசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை தொடர்ந்து இன்று 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை தேரருடன் சென்ற இருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்டபோது குறித்த வழக்கை நீதவான் விசாரணைக்கு எடுத்து கொண்ட போது தேரரை இனிமேல் எந்த அரச திணைக்களங்களுக்கும் சென்று இவ்வாறு அச்சுறுத்தல் செய்யக்கூடாது, இந்த வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை அச்சுறுத்தல் செய்ய கூடாது,
அத்துடன் இந்த சப்பவத்துடன் தொடர்பட்டு தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இதனை மீறும் பட்சத்தில் இந்த வழக்கு பிணையை இரத்து செய்து வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் வைக்கப்படும் என நிபந்தனைகளுடன் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இருவர் கொண்ட சரீரப் பிணையில் விடுத்தார்.
அதேவேளை கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 18 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அடுத்த வழக்கு எதிர்வரும் 18 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.











