வவுனியா, ஓமந்தை பகுதியில் தொடரூந்துடன் மோதி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
இன்று மாலை யாழில்இருந்து வவுனியா நோக்கி பயணித்த தொடரூந்து புளியங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது தொடரூந்து பாதையில் நடந்து சென்ற பெண்ணுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி மரணமடைந்தார்.
உயிரிழந்தவர், இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்த ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.











