பாஷையூர் பங்குத்திருச்சபையினால் கத்தோலிக்க இளையோர் ஒன்றிய வாரம் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் அதனை முன்னிட்டு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை நற்கருணை பவனி இடம்பெற்றது.
புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பவனி கொழும்புத்துறை மகேந்திரபுரம் மற்றும் பாஷையூர் கிராம வீதிகள் ஊடாக வலம் வந்து இறுதியில் நற்கருணை ஆசீருடன் நிறைவுபெற்றது.
இந்த நற்கருணை பவனியில் கலந்துகொண்ட இளைஞர்கள், யுவதிகள் மற்றும் இறைமக்களை படங்களில் காணலாம்.





