12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றசாட்டில் சிறுமியின் தந்தை மற்றும் பதின்ம வயதான இரண்டு சகோதரர்கள் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகம போலீசார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் 47 வயதுடைய தந்தையும் 18 மற்றும் 15 வயதுடைய இரு சகோதரர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலில் தனது தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.மற்றுமொரு நாள் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத போது தனது இரு சகோதரர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தை எவரிடமும் கூற கூடாது என சிறுமியை அச்சுறுத்தியுள்ளதால் சிறுமி இது தொடர்பில் தனது தாயிடம் தெரிவிக்காமலிருந்துள்ளார்.அதன் பின்னர்,சிறுமியின் வீட்டிற்க்கு சென்ற உறவினர் ஒருவர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதை அடுத்து அது தொடர்பில் சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் மூத்த சகோதரனுக்கு வெலிப்பிட்டிய பிரதேசத்தில் வேலை வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதால் பிரதேச செயலகத்தின் அதிகாரி ஒருவர் சிறுமியின் வீட்டை சோதனையிடுவதற்க்குச் சென்ற போது,சிறுமி தனக்கு நடந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அந்த அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து,அந்த அதிகாரி இது தொடர்பில் வெலிகம போலீசாருக்கு தகவல் வழங்கிய நிலையில்,விசாரணைகளை ஆரம்பித்த போலீசார் சந்தேக நபரான தந்தை மற்றும் இரு சகோதரர்களை கைது செய்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம போலீஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.





