சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலியான செய்திகளுக்கு அமைய வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் பொது மக்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் தொடர்ந்தும் பரப்பப்படுவதாக ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.





