கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே இராஜதந்திர தகராறு நடந்து வரும் நிலையில், ஒட்டாவாவின் சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு புது டெல்லிக்கு இங்கிலாந்து அழைப்பு விடுத்துள்ளது.
புதன்கிழமை, பிரிட்டிஷ் வெளியுறவு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் கனடாவுடனான இந்தியாவின் ஒத்துழைப்பானது “அடுத்த சரியான நகர்வுக்கு ” சிறந்த வழி என இங்கிலாந்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.
“கனடாவில் சுயாதீன விசாரணைகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள தீவிர முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் எங்கள் கனேடிய பங்காளிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். கனடாவின் நீதித்துறையில் இங்கிலாந்துக்கு முழு நம்பிக்கை உள்ளது. இறையாண்மை மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை அவசியம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களான கனேடிய குடிமக்களைக் குறிவைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆறு இந்திய இராஜதந்திரிகளை கனடா திங்களன்று நாட்டிலிருந்து வெளியேற்றிய பின்னர் இந்த அறிக்கை வந்துள்ளது. கனேடிய அதிகாரிகள் இந்தியாவின் உயர் ஆணையர் மற்றும் இராஜதந்திர அலுவலகங்களில் பணிபுரியும் பிற நபர்களை அதன் மண்ணில் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதுடன் தொடர்புபடுத்தினர் மற்றும் கனடாவில் உள்ள இந்திய எதிர்ப்பாளர்களை குறிவைக்கும் ஒரு பரந்த முயற்சி என புதுடில்லி கனடா மீது குற்றம் சாட்டியமை குறிப்பிடத்தக்கது.





