EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
அருச்சுனாவிற்கு நிதி வந்ததா ? – சி. மயூரன்

பலர் இன்று அருச்சுனாவால் துரோகி என கூறப்பட்டதன் பின்னால் பெரும் சக்தி ஒன்று உள்ளது- சி. மயூரன்

ஐப்பசி 31, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

பலர் இன்று அருச்சுனாவால் துரோகி என கூறப்பட்டதன் பின்னால் பெரும் சக்தி ஒன்று உள்ளது. அவர்கள் அருச்சுனாவிற்கு பாரிய குழி வெட்டுகின்றனர். என வைத்தியர் அருச்சுனாவின் நண்பரும் , வைத்தியரின் சுயேட்சை குழு உறுப்பினருமான சி. மயூரன் தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வைத்தியர் அருச்சுனா சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சனைகளை வெளிக்கொண்டு வந்த கால பகுதியில் நெருக்கடிகளை சந்தித்த போது அவர் நலன் சார்ந்து நானும் எங்கள் நண்பர்கள் சிலருமே செயற்பட்டோம். தற்போது புதுசு புதுசாக சேர்ந்து கொண்ட சிலராலேயே பிரச்சனைகள் உருவாகியுள்ளன. அதனால் மக்கள் சரியான துரோகிகளை இனம் காண வேண்டும்.

அருச்சுனாவிற்கு பெயர் புகழ் வர முதலே அவரை பாதுகாக்க வேண்டும் என ஓடிக்கொண்டிருந்தோம். புகழ் , மக்கள் செல்வாக்கு வந்த பிறகு இணைந்து கொண்டவர்கள் அல்ல நாம்

தேர்தலில் நிற்க போவதாக அறிவித்த போது , நான் கேட்டேன். நீ தேர்தலில் நிற்கிறாயா ? என “ஓம். எல்லோரும் என்னை வைச்சு செய்யுறாங்க நீ வாடா .. ” என சொன்னார். அதற்கு பிறகு நான் வெளிநாட்டில் இருந்து உடனேயே இலங்கை வந்து , வேட்புமனுவில் கையெழுத்திட்டேன். அதன் பிறகு தான் பல சர்ச்சைகளுக்குள் எங்களை இழுத்து விட்டிருக்கு.

வேட்புமனு தாக்கல் செய்த 11ஆம் திகதியில் இருந்து , இன்றைக்கு 31ஆம் திகதி வரையிலான கடந்த 20 நாட்களில் அருச்சுனாவின் உண்மையான நலன்விரும்பிகளிடம் இருந்து பிரிக்கப்பட்டார்.

அருச்சுனாவின் நலன் விரும்பிகளாக இருந்த பலர் இன்று அருச்சுனாவால் துரோகி என கூறப்பட்டதன் பின்னால் பெரும் சக்தி ஒன்று உள்ளது என்பதனை நான் பகிரங்கமாக கூறுகிறேன்.

யாரோ ஓர் இருவரை நம்பி அருச்சுனா தனக்கு நல்லது நடக்கும் என நினைக்கிறார். அவ்வாறு நடந்தால் எமக்கு சந்தோசம் ஆனால் எனது பார்வையில் அருச்சுனாவிற்கு பெரும் குழி வெட்டுகின்றனர். கூட நின்று குழி வெட்டி விழுத்திய பின்னர் அவரை மீட்க போவதும் நாமே …

அருச்சுனா ஆரம்பத்தில் கையில் எடுத்துக்கொண்ட பிரச்சனை ,இன்றும் பிரச்சனையாகவே இருக்கின்றது. அந்த பிரச்சனைக்கு தீர்வு காண மக்கள் ஆர்வம் காட்டுகின்றார்கள்.

எல்லோரும் என்னை கேட்கின்றார்கள் , “நீயேன் இதில வந்து நிற்கிறாய் ?” என , அருச்சுனா என் நண்பன் என்பதற்காக நான் இதில் வந்து நிற்கவில்லை. அருச்சுனா கையில் எடுத்துக்கொண்ட விடயமான ஊழல் , அநியாயம் , கவனமின்மை , இந்த விடயங்களை தீர்க்கும் முகமாகவே நான் இதற்குள் வந்தேன்.அதில் நான் உறுதியாக நிற்கிறோம் அருச்சுனா எம்மை துரோகி என அறிவித்தாலும் நாம் அவருக்காக நிற்போம் என மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்
அண்மைய செய்திகள்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

ஆவணி 24, 2026
காணாமல் போன 31 பேரை கண்டறிந்துள்ளோம் – மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு
அண்மைய செய்திகள்

காணாமல் போன 31 பேரை கண்டறிந்துள்ளோம் – மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு

ஆவணி 24, 2026
துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது
அண்மைய செய்திகள்

துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

ஆவணி 24, 2026
வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!
அண்மைய செய்திகள்

வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

ஆவணி 24, 2026
வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அரசியல் பிரதிநிதிகள்
அண்மைய செய்திகள்

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அரசியல் பிரதிநிதிகள்

ஆவணி 24, 2026
யாழ் காரைநகர் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள சடலம்
அண்மைய செய்திகள்

யாழ் காரைநகர் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள சடலம்

ஆவணி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

காணாமல் போன 31 பேரை கண்டறிந்துள்ளோம் – மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு

காணாமல் போன 31 பேரை கண்டறிந்துள்ளோம் – மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு

3 மணத்தியாலங்கள் முன்னர்
நெடுந்தீவு குதிரைகளுக்கு தண்ணீர் வழங்கும் கடற்படையினர்

நெடுந்தீவு குதிரைகளுக்கு தண்ணீர் வழங்கும் கடற்படையினர்

2 நாட்கள் முன்னர்
மட்டு கோட்டைக்கல்லாற்றில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி

மட்டு கோட்டைக்கல்லாற்றில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி

1 நாள் முன்னர்
புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

6 நாட்கள் முன்னர்
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்!

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In