தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை நடைமுறைபடுத்தியுள்ள விஷேட போக்குவரத்து சேவைகளினூடாக பெருமளவு வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் அல்விஸ் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய நாளில் (11.04.2024) மாத்திரம் 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தில் 4500 விஷேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர்லலித் அல்விஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் உரிய பஸ் சேவைகள் இடம்பெறுவதில்லையென பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.