முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட அளம்பில் அந்தோனியார் ஆலய திருவிழா 13.06.2024 இன்று மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.
அளம்பில் அந்தோனியார் ஆலய திருவிழாவின் வேஸ்பர் திருப்பலி 12.06.2024 அன்று மாலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருவிழா திருப்பலியானது இன்று காலை அருட்பணி டேவிட் அடிகளார் தலைமையில் நடைபெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
திருவிழாவில் மறைக்கோட்ட குருக்கள், அருட்தந்தையர்கள் பங்குத்தந்தையர்கள், அருட்சககோதரிகள் உள்ளிட்டவர்களின் பங்கு பற்றலுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளதுடன் அரச திணைக்கள அதிகாரிகளும் திருவிழாவில் பங்கெடுத்துள்ளார்கள்.
திருவிழா திருப்பலி நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.