EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
Kilinochi முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக திரட்டப்படும் நிதியில் முறைகேடு.

module:0facing:0; hw-remosaic: 0; touch: (0.27430558, 0.27430558); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

Kilinochi முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக திரட்டப்படும் நிதியில் முறைகேடு.

உயிரிழை அமைப்பின் உறுப்பினர்களால் குற்றச்சாட்டு முன்வைப்பு.

ஆனி 18, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக திரட்டப்படும் நிதியில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக உயிரிழை அமைப்பின் உறுப்பினர்கள் வெளியேறி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

கிளிநொச்சி சோலைவனம் விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களிற்கு இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

யுத்த காலத்திலும், அதன் பின்னரான காலத்திசம் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வவுனியா சமூக சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உயிரிழை அமைப்பு, முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பகுதியை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

குறித்த அமைப்பிற்கு பெரும் தொகை நிதி உதவிகள் கிடைப்பதாகவும், அவை உரிய முறையில் பயனாளிகளுக்கு சென்றடைவதில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிதியைவிட, ஊழியர்களுக்கு அதிக நிதி செலவாவதாகவும் குற்றம் சாட்டப்படுவதுடன், குறிப்பிட்ட காலத்திற்குள் 4 கோடிக்கு அதிக நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.

வருமானம் ஈட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பண்ணை வளர்ப்பில் ஆடு கொள்வனவு செய்யப்பட்டதிலும் ஊழல் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த அமைப்பின் தலைவர் ஒரு தொகை நிதியை தனது தனிப்பட்ட வங்கி கணக்குக்கு வைப்பு செய்துள்ளமை தொடர்பிலும் தகவல் வெளியிடப்பட்டது.

வாகன கொள்வனவு மற்றும் ஒப்பந்த நடவடிக்கைகளிலும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் இன்றைய ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்ட பயனாளிகளால் குற்றம் சுமத்தப்பட்டது.

படுக்கைப்புண், வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட 190க்கு மேற்பட்ட பயனாளிகளில், 25க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் முறைகேட்டுக்கு எதிராக வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைகேடுகள் தொடர்பில் சமூக சேவைகள் திணைக்களத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ள போதிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எமது பாதிப்புக்களை மையப்படுத்தி திரட்டப்படும் நிதிகள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதுடன், மோசடிகளும் இடம்பெறுவதாக இன்றைய ஊடக சந்திப்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு
அண்மைய செய்திகள்

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

மார்கழி 7, 2025
வடக்கில் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் எச்சரிக்கை
இலங்கை

வடக்கில் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் எச்சரிக்கை

மார்கழி 7, 2025
அடையாளம் காண முடியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
அண்மைய செய்திகள்

அடையாளம் காண முடியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மார்கழி 7, 2025
யாழில் அதிரடிப் படையினரால் வீடு ஒன்று முற்றுகை!
அண்மைய செய்திகள்

யாழில் அதிரடிப் படையினரால் வீடு ஒன்று முற்றுகை!

மார்கழி 7, 2025
யாழில் பொலிஸாரால்  முற்றுகையிடப்பட்ட  வீடு
இலங்கை

யாழில் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட வீடு

மார்கழி 7, 2025
தலைவரால் உருவாக்கப்பட கட்சி என்பதால் மக்கள் வாக்களித்தனர் – ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன்
அண்மைய செய்திகள்

தலைவரால் உருவாக்கப்பட கட்சி என்பதால் மக்கள் வாக்களித்தனர் – ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன்

மார்கழி 7, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

எலிக்காய்ச்சல் தொடர்பாக வைத்தியர் சிவஞானசுந்தரம் சேரலாதன் விடுத்துள்ள அறிவிப்பு!

எலிக்காய்ச்சல் தொடர்பாக வைத்தியர் சிவஞானசுந்தரம் சேரலாதன் விடுத்துள்ள அறிவிப்பு!

4 நாட்கள் முன்னர்
கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை

கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை

3 நாட்கள் முன்னர்
யாழில் எலிக்காய்ச்சலில் இருவர் உயிரிழப்பு!

யாழில் எலிக்காய்ச்சலில் இருவர் உயிரிழப்பு!

6 நாட்கள் முன்னர்
உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

2 நாட்கள் முன்னர்
மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை!

மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை!

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In