பதுளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி சென்ற தனியாருக்கு சொந்தமான பேருந்தொன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
பண்டாரவளை பகுதியிலிருந்து வெல்லவாய நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளே தனியார் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்குண்டு இளைஞர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நிகழும் வேளையில் அப்பகுதியில் மழை பெய்துள்ளதுடன் , விபத்தில் உயிரிழந்த இளைஞர் 19 வயதுடையவர் என்பதுடன் வெல்லவாய பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.











