இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27,197 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதன்படி மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
அத்துடன் டெங்கு நோய் காரணமாக இதுவரையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதால் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.











