தேவையான பொருட்கள்
வடா பாவ் பன் – 10 உருளைக்கிழங்கு – 4
மஞ்சள் தூள் – 1 பின்ச்
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு
எலுமிச்சை – 1
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
கடலை மாவு – 200 கிராம்
தண்ணீர் – தேவையான அளவு
நல்லெண்ணெய் – பொறிக்க
பச்சை மிளகாய் – 10
புதினா சட்னி – தேவையான அளவு
கார சட்னி – தேவையான அளவு
செய்முறை
முதலில் உருளைக் கிழங்கை ஒரு குக்கரில் போட்டு நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த உருளைக் கிழங்கை தோல்களை நீக்கி, ஒரு மத்து அல்லது மேஷர் கொண்டு மசித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு மஞ்சள் தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின்னர் மசித்து வைத்துள்ள உருளைக் கிழங்கு, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும்.
கிளறிய உருளைக்கிழங்கை சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய கிழங்கை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சிறிது உப்பு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நல்லெண்ணை ஊற்றவும்.
நன்கு எண்ணெய் காய்ந்தவுடன் உருட்டி வைத்திருந்த உருளைக்கிழங்கை கடலை மாவு கலவையில் சேர்த்து எண்ணெய் சட்டியில் போட்டு பொறித்து எடுத்து கொள்ளவும்.
அதே எண்ணெயில் பச்சை மிளகாய் போட்டு பொறித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் வடா பாவ் பன்னை எடுத்து குறுக்கே இரண்டாக வெட்டிக் கொள்ளவும். (முழுமையான வெட்டக்கூடாது)
வெட்டிய பன்னின் உள்ளே ஒருபக்கம் புதினா சட்னியையும், மறுப்பக்கம் சட்னியை தடவி பொறித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை நடுவில் வைத்து அதனுடன் பொறித்து எடுத்த
இதோ வீட்டிலேயே எந்த தீங்கும் இல்லாத வடா பாவ் ரெடி.