தேவையான பொருட்கள்
இறால் – 1/2 கிலோ தேங்காய்
பால் – 50 கிராம்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகுதூள் – நுனுக்கியது 1/2 ஸ்பூன்
வரமிளகாய் பொடித்தது – 1/2 ஸ்பூன்
இஞ்சி – பொடியாக நறுக்கியது 1 ஸ்பூன்
பூண்டு – பொடியாக நறுக்கியது 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 4 கீறியது
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
இறாலை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இறால், மஞ்சள் தூள், பொடித்த மிளகு, வரமிகாய் பொடித்தது, பூண்டு, தேங்காய் எண்ணெய் இவை அனைத்தையும் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
மிக்ஸ் செய்த இறால் கலவையை ஃபிரிட்ஜில் வைத்து 30 முதல் 45 நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு பௌவுலில் 50 கிராம் தேங்காய் பால், தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலையை பொடியாக கட் செய்து அதனுடன் சேர்த்து, தயாரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றில், அதில் ஊற வைத்துள்ள இறால் துண்டுகளை சேர்க்கவும்.
3 நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பிவிடவும். மொத்தம் 5 நிமிடம் சமைக்கலாம். பின்னர் பச்சை மிளாய் சேர்க்கவும்
தயாரித்து வைத்துள்ள தேங்காய் பால் கலவையை இறாலுடன் சேர்த்து 3 நிமிடங்கள் கிளறவும்.
இதோ சுவையான தேங்காய் பால் ஃபிரான் ரோஸ்ட் ரெடி.