மின்சார கட்டணத்தால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இது தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
நாளை முதல் மின் கட்டணமானது 22.5 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது வழங்கியுள்ளது.
இதன்படி 0 முதல் 30 வரையான மின் அலகின் கட்டணம் 2 ரூபாவினாலும், 30 முதல் 60 வரையான மின் அலகின் கட்டணம் 11 ரூபாவினாலும், 60 முதல் 90 வரையான மின் அலகின் கட்டணம் 12 ரூபாவினாலும், 90 முதல் 120 வரையான மின் அலகின் கட்டணம் 20 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வணக்கஸ்தலங்களுக்கான மின் கட்டணம் 30 வீதத்தினாலும், வீட்டு பாவனைக்கான கட்டணமாக 27 வீதத்தினாலும் கைத்தொழில் சார்ந்த மற்றும் விருந்தகங்களுக்கான மின் கட்டணம் 25 வீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.