வன்னியில் அரச உத்தியோகத்தர்களின் 228 விண்ணப்பங்கள் நிராகரிப்பு
ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்காக வன்னி தேர்தல் தொகுதியில் விண்ணப்பித்த 13 ஆயிரத்து 389 அரச உத்தியோகத்தர்களின் விண்ணப்பங்களில் 228 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பி. ஏ. சரத் சந்திர தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக வவுனியா மாவட்டத்தில் 128585, மன்னார் மாவட்டத்தில் 900607, முல்லைதீவு மாவட்டத்தில் 86889 வாக்காளர்களும் உள்ளடங்களாக வன்னி தேர்தல் தொகுதியில் வாக்களிக்க 306081 தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை 387 வாக்களிப்பு நிலையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தபால் மூல வாக்கெண்ணுவதற்காக 10 நிலையங்களும் சாதாரண வாக்கெண்ணுவதற்காக 27 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.










