EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு Uncategorized
மன்னார் நகர எல்லைக்குள் கடைகள் ஏல விற்பனை – டானியல் வசந்தன்

மன்னார் நகர எல்லைக்குள் கடைகள் ஏல விற்பனை – டானியல் வசந்தன்

மார்கழி 20, 2025
வகை: Uncategorized, இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் நகர எல்லைக்குள் நத்தார், புதுவருட பண்டிகை கால வியாபார நடவடிக்கைகளுக்கு கடைகள் அமைக்க இடம் ஏல விற்பனை மூலம் வழங்கப்பட்ட நிலையில் நகர சபைக்கு சுமார் 4 கோடிக்கும் அதிகமான வருமானம் கிடைக்க பெற்றுள்ளதாகவும், கடந்த காலங்களில் ஊழல் இடம்பெற்றுள்ளமைக்கு குறித்த வருமானம் ஒரு எடுத்துக் காட்டு என மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை (20) காலை மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் நகர சபையினால் 2025 ஆம் ஆண்டுக்கான பண்டிகைக்கால வியாபார நிலையங்களை அமைத்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏல விற்பனை மூலம் இடம் வழங்கப்பட்டது.மன்னார் நகர சபை பிரிவில் 339 தற்காலிக வியாபார நிலையங்களை அமைக்க இடம் அடையாளம் காணப்பட்டது.

அதில் 284 கடைகள் நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை வரை ஏல விற்பனை செய்யப்பட்டுள்ளது.அதன் ஊடாக மன்னார் நகரசபைக்கு 4 கோடியே 85 ஆயிரத்து 866 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

மேலும் 55 கடைகள் ஏல விற்பனைக்கு செல்ல உள்ளது.அதனூடாக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். குறித்த வருமானங்களை வைத்துக் கொண்டு மன்னார் நகர சபை பிரிவில் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த குறித்த நிதி 2026 ஆம் ஆண்டு பாதீட்டில் பயன்படுத்தப்பட உள்ளது.

மன்னார் மாவட்டத்தில் அனர்த்த நிலை ஏற்பட்ட போது நகர சபைக்கு வருமான இழப்பு ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டிருந்தது.ஆனால் கடந்த காலங்களை விட வெளிப்படை தன்மையுடன் ஏல விற்பனை இடம் பெற்றமையால் இம்முறை 4 கோடிக்கும் மேற்பட்ட வருமானம் கிடைக்க பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் முந்தைய நிர்வாகங்களினால் எவ்வாறு ஊழல் இடம் பெற்றுள்ளது என்பதற்கு இது ஒரு முன் உதாரணமாக இருக்கிறது.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மிகவும் குறைந்த அளவிலான வருமானமே மன்னார் நகரசபைக்கு கிடைக்கப்பெற்றது.பண்டிகை கால வியாபாரங்களை பாரிய அளவில் மன்னாரில் மேற்கொண்டு வரும் பல வியாபாரிகளிடம் நான் வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டுள்ளேன்.அவர்களின் வாக்கு மூலங்களை அடுத்த சபை அமர்வில் முன் வைக்க இருக்கிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆறு தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அண்மைய செய்திகள்

ஆறு தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஆவணி 11, 2026
முல்லைத்தீவில் மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
அண்மைய செய்திகள்

முல்லைத்தீவில் மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்

ஆவணி 11, 2026
யாழ். அரியாலையில் இடம்பெற்ற பெண்கள் மாநாடு
இலங்கை

யாழ். அரியாலையில் இடம்பெற்ற பெண்கள் மாநாடு

ஆவணி 11, 2026
பலாலியில் 7 ஆவது வாரம் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
இலங்கை

யாழ் மாநகர சபையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

ஆவணி 11, 2026
மட்டக்களப்பில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலி அறுப்பு
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலி அறுப்பு

ஆவணி 11, 2026
மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்

ஆவணி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கமாறு  கோரிக்கை – நா.வர்ணகுலசிங்கம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கமாறு கோரிக்கை – நா.வர்ணகுலசிங்கம்

23 மணத்தியாலங்கள் முன்னர்
ஈரானுடன் போரை விட ஒப்பந்தமே முக்கியம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம்

ஈரானுடன் போரை விட ஒப்பந்தமே முக்கியம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம்

5 நாட்கள் முன்னர்
மன்னார் வங்காலை கடற்கரையில்  ஆணொருவரின் சடலம் மீட்பு

மன்னார் வங்காலை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

4 நாட்கள் முன்னர்
இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

6 நாட்கள் முன்னர்
கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை மாணவர்கள் எழுத வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை மாணவர்கள் எழுத வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In