வவுனியா பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய தலைவராக நல்லையா ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று வவுனியா சிக்கன கடன் கூட்டுறவு சங்க தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற வவுனியா பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவிலேயே ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள பிரதம பொறியியலாளரான இவர் தேர்வு செய்யப்பட்டார்.
இதன்போது உப தலைவராக வீரபாகு ஜெகசோதிநாதனும் நிர்வாக உறுப்பினர்களாக சிதம்பரப்பிள்ளை வரதராஜாவும் கதிரேசு சுபாகரனும் நாகலிங்கம் சிவானந்தராசாவும் தெரிவுசெய்யப்பட்டதுடன் 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக சிவலிங்கம் சுகிர்துஜன் மற்றும் கருணாநிதி பிரேமினி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நிர்வாகத்தின் ஆட்சிக்காலம் 3 வருடங்கள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











