கோட்டபாய ராஜபக்ஷவின் மோசமான ஆட்சியின் போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இந்த நாடும் மாவட்டமும் பாதிக்கப்பட்டது.
குறித்த நாட்டை முழுமையாக மீட்டெடுக்கவும்,மன்னார் மாவட்ட மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கவும் மக்கள் தகுதியான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மன்னாருக்கு விஜயம் செய்ய உள்ளார்.மன்னார் மாவட்ட மக்கள் ஒன்று பட்டு அவரை வெற்றி பெறச் செய்ய இருக்கிறார்கள்.கத்தோலிக்க மக்கள் அதிகமாக இருக்கின்ற இந்த மாவட்டத்தில் முஸ்லிம் மற்றும் இந்து மக்களும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
அனைவரும் ஒற்றுமையாக வாழ்கின்ற இந்த மாவட்டத்தில் சஜித் பிரேமதாசவின் வருகையை எதிர் பார்த்துள்ளனர்.
கோட்டபாய ராஜபக்ஸவின் மோசமான ஆட்சியின் போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இந்த மாவட்டமும் பாதிக்கப்பட்டது.
இந்த மாவட்டத்தில் இருக்கின்ற பாதிப்புக்களில் இருந்து இம் மாவட்டத்தை மீட்டெடுப்பதற்காகவும்,இந்தியாவிற்கு அருகில் இந்த மாவட்டம் இருக்கின்றமையினால் இந்தியாவிற்கும் தலைமன்னாருக்கும் இடையில் பாலம் அமைத்தல்,கப்பல் சேவையை ஆரம்பித்தல்,சுற்றுலாத்துறையை மேம்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்து நாங்கள் சஜித் பிரேம தாசாவுடன் பேசி உள்ளோம்.
நாடு முழுவதும் அவருடைய வெற்றிக்காக மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.எனவே அவர் மீது எங்களுக்கு பூரண நம்பிக்கை உள்ளது.அவர் பல விடையங்களை கேட்டுச் செய்யக் கூடியவர்.எனவே அவரை வெற்றி பெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக் கூடாது.மிகவும் நொந்து போன ஒரு சமூகமே எம் தமிழ் சமூகம்.
அவரினால் எமது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்பதை உணர்ந்து சஜித் பிரேமதாச அவர்களை அமோக வாக்குகளால் வெற்றி பெறச் செய்யுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.











