மனைவியின் அந்தியேட்டி கிரியையின் போது , கணவனும் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
கரணவாய் பகுதியை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்திருந்தார். அவரின் அந்தியேட்டி கிரியைகள் நேற்று முன் தினம் இடம்பெற்றது.
அதன் போது, உயிரிழந்த பெண்ணின் கணவனான முத்தன் தர்மலிங்கம் என்பவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார்.





