நாளை இடம்பெறவிருத்த சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக மாவட்ட பிரதான ஏற்பாட்டாளர் எம்.மரியசீலன் தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையை கருத்தில் கொண்டு குறித்த பிரச்சாரக் கூட்டம் பிற்பகல் அளவில் இடம்பெறவுள்ளதாக அவர் தொடித்தார்.
கிளிநொச்சியில் இடம்பெறவிருந்த குறித்த பிரச்சாரக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு டிப்போ சந்தியில் உள்ள பசுமைப் பூங்காவில் இடம்பெறவிருந்தது.
கிளிநொச்சி மத்திய கல்லூரியில் புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில், குறித்த கூட்டம் தொடர்பில் தேர்தல்கள் திணைக்களத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் குறித்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





