இத்தனை ஆண்டுகள் காத்திருந்தாலும் இப்போது எமக்கு வாய்ப்பளித்த மக்களிற்கு நன்றி எமது முதல் வெற்றி பூரணமடைவது எப்போது என்றால் எம் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கழும் எம் செயற்பாடுகளின் மூலம் திருப்தி காணும் போதுதான்
எம்மீது பல அதிருப்தி இருந்த போதிலும் மாற்றம் ஒன்றுக்காய் எம்மை தேர்வுசெய்துள்ளீர்கள் ஆகவே நீங்களும் எங்களுடன் இணைத்து பயணிப்பது முக்கியமான ஒன்றாகும்
நாட்டை கட்டியெழுப்புவதற்கான திறமையானவர்கள் எம்மோடு இருக்கின்றனர்
எமது முதல் வேலை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே
அதற்காக குறுகியகால வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்
எமது நடவடிக்கைகள் பலதை முன்னெடுப்பதற்கு முதலில் பொருளாதார இஸ்திரத்தன்மையும் எம்மீதான நம்பிக்கையும் ஏற்படுத்தப்படவேண்டும்
சர்வதேச நாணய நித்தியதுடன் பேசசுவார்த்தைகளை நடத்தி கடன்களை பெற்றுக்கொள்வோம்
அரசியல் கலாசாரத்தில் உள்ள சீர்கேடுகளை முதலில் சீரமைக்க வேண்டும்
இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் சமம் எனப்பார்க்கும் நிலை வரும் வரை நாடு வெற்றிபெற முடியாது . இனம் மதம் கலாச்சாரம் என்ற பிரிவு முற்றுமுழுதாக மாற்றப்படும்
சட்டத்தை மதிக்க கூடிய,ஒழுக்கமான ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம் அனைத்து மக்களின் சமூக பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் அதேநேரம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும் நிலை நாட்டுவோம்
மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வாழ்க்கை சுமை குறைக்கப்படும் அதே நேரம் மாணவர்களிற்கு தரமான கல்வி சேவையை நாங்கள் உறுதி செய்வோம்
பெண்களுக்கான வேலைத்திட்டங்களை உருவாக்கி அவர்களை வலுப்படுத்துவோம்
இனவாதம் மதவாதம் சர்வாதிகாரம் போன்றவற்றால் முன்னேறாமல் இருந்த நாட்டை அவற்றில் இருந்து மீட்டு முன்னேற்றுவோம்
இன்றைய நாளைவிட நாளைய நாள் நன்றாக அமைய அனைவரும் ஒன்றிணைவோம் என குறிப்பிட்டார்











