யாழில் காதலித்த பெண் விட்டுச் சென்றதால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.இதன் போது கச்சேரி,நல்லூர் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய திருநாவுக்கரசு வெலிற்றன்.என்ற இளைஞனே இவாறு உயிரிழந்துள்ளான்.
குறித்த இளைஞனும் யுவதியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ள நிலையில் அந்தப்பெண் வெளிநாடு செல்வற்தகாக இளைஞனுடனான தொடர்பை துண்டித்துள்ளார்.
இதனால் மன விரக்தியடைந்த இளைஞன் நேற்று (27) காலை தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.இந்நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்க்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.