இலங்கைக்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அந்த வகையில் செப்டம்பர் மாதத்தின் முதல் 25 நாட்களில் வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 99,955 ஆகும்.
இந்நிலையில் அதிகளவான சுற்றுலா பயணிகள் இந்திய நாட்டிலிருந்து வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளதுடன் இந்தியாவிலிருந்து சுமார் 21,607 வருகை தந்துள்ளனர்.
இதன்படி சீனாவிலிருந்து 6,640 பேரும், ஜேர்மனியிலிருந்து 6,651 பேரும், பிரித்தானியாவிலிருந்து 7,496 பேரும் நாட்டிற்க்கு சுற்றுலாவிற்க்காக வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











