எதிர்வரும் பொது தேர்தலுக்கான கண்டி மாவட்டத்திற்கான இ.தொ.கா வின் புதிய அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்பாளராக பாலகிருஷ்ணன் பிரசாத்குமார் இன்றைய தினம்(08) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இ.தொ.கா தலைமையகமான சௌமியபவனில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கண்டி மாவட்டத்தில் நிலவிய மேற்படியான அமைப்பாளர் பதவியின் வெற்றிடத்தினை இ.தொ.கா உறுப்பினர்கள் பூர்த்தி செய்துள்ளனர்.
மேலும் இந்த அறிவிப்பானது இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.











