EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்- சிவசக்தி ஆனந்தன்

தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்- சிவசக்தி ஆனந்தன்

ஐப்பசி 21, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேசிய இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்பதை கூறி கொண்டுள்ள நேரத்தில் வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை தவிர ஏனையவர்கள் தேசிய இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்பதை அரசாங்கத்தின் அதே நிலைப்பாட்டுடன் ஆதரவாக செயல்பட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை(21) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கில் இம்முறை போட்டியிடுகின்ற மிக பலமான கூட்டணியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் போட்டியிடுகிறது.

அதே வேளை இத் தேர்தலானது அதிகூடிய பாராளுமன்ற வேட்பாளர்களை கொண்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லுகின்ற ஒரு கூட்டணியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக காணப்படுகின்றது.

தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்கிற விடயத்தில் பலமான ஒரு கூட்டணியாக எமது கூட்டணி காணப்படுகின்றது.

தமிழ் மக்களுக்கு கடந்த 75 வருடங்களாக ஒரு தேசிய இனப்பிரச்சினை காணப்படுகின்றது.தேசிய இனப் பிரச்சினைக்காக பல வருடங்களாக அகிம்சை ரீதியாகவும்,ஜனநாயக ரீதியாகவும் தமிழ் மக்கள் போராடி உள்ளனர்.இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையை முன் நிறுத்தி நாங்கள் வடக்கு கிழக்கில் எமது வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாங்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி இருந்தோம்.மிகக் குறுகிய காலத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் எமக்கு வாக்களித்து உள்ளனர்.

அது இந்த பாராளுமன்ற தேர்தலில் இரட்டிப்பான ஆதரவை தமிழ் மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள்.

இந்த தேர்தல் காலத்திலே அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேசிய இனப்பிரச்சினை இல்லை என்பதை கூறி கொண்டுள்ள அதே நேரத்தில் வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யை தவிர ஏனையவர்கள் தேசிய இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்பனை அரசாங்கத்தின் அதே நிலைப்பாட்டுடன் ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் இத் தேர்தல் களத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

தமிழ் மக்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை பலப்படுத்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

மக்கள் எங்களுக்கு இரட்டிப்பான ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு
அண்மைய செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

மார்கழி 11, 2025
அமெரிக்க உப இராஜாங்க செயலாளர் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்!
இலங்கை

அமெரிக்க உப இராஜாங்க செயலாளர் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்!

மார்கழி 11, 2025
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர்  கைது
அண்மைய செய்திகள்

யாழ். பல்கலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

மார்கழி 11, 2025
தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது
அண்மைய செய்திகள்

தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது

மார்கழி 11, 2025
தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் – இளங்குமரன் உறுதியளிப்பு
இலங்கை

தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் – இளங்குமரன் உறுதியளிப்பு

மார்கழி 11, 2025
முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
இலங்கை

முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

மார்கழி 11, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் அழகுசாதன பொருட்கள்

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் அழகுசாதன பொருட்கள்

7 நாட்கள் முன்னர்
பாணந்துறை, வலான வீதி பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை

பாணந்துறை, வலான வீதி பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை

2 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பு நகரில் நீல நிறமாக மாறிய கிணற்று நீர்

மட்டக்களப்பு நகரில் நீல நிறமாக மாறிய கிணற்று நீர்

15 மணத்தியாலங்கள் முன்னர்
சீரற்ற காலநிலையால் 1.7 மில்லியன் மக்கள் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் 1.7 மில்லியன் மக்கள் பாதிப்பு!

6 நாட்கள் முன்னர்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சந்தித்த முக்கிய கட்சி

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சந்தித்த முக்கிய கட்சி

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In