பதுளை நகரில் சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்தியதற்காக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதுளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார்.
இருப்பினும் இவர் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.மேலும் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர்,நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.





