EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மன்னார் வைத்தியசாலையில் தாய்,சேய் மரணங்கள் – விசாரணைகளை வலியுறுத்தி ரிஷாட் சுகாதார அமைச்சருக்கு கடிதம்!

மன்னார் வைத்தியசாலையில் தாய்,சேய் மரணங்கள் – விசாரணைகளை வலியுறுத்தி ரிஷாட் சுகாதார அமைச்சருக்கு கடிதம்!

கார்த்திகை 21, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் பொது வைத்தியசாலையில் தாய், சேய் உயிரிழந்தமை தொடர்பில் பகிரங்கமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவை கடிதம் மூலம் கேட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (19) பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய், சேய் மரணங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியே இந்தக் கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார்.
குறித்த தாய் மூச்சுத்திணறல் உட்பட்ட சில உபாதைக்குள்ளானமை தொடர்பில் அவரது உறவினர்கள் அங்கு கடமையிலிருந்தவர்களுக்குச் சுட்டிக்காட்டியும் அவற்றைப் புறந்தள்ளி சாதாரண மகப்பேற்றுப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது அந்த தாய் மிகவும் கஷ்டமான நிலையிலேயே காணப்பட்டுள்ளார். இது தொடர்பில் மீண்டும் அவரது உறவினர்கள் வைத்தியர்கள், தாதியர்களிடம் சுட்டிக்காட்டியும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை எனவும் இதன் காரணமாகவே தாயின் மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மன்னார் வைத்தியசாலையில் அனைத்து வசதிகள் இருந்தும் அசட்டைப்போக்குக் காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணின் சிசுவும் உயிரிழந்தமையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.இந்த நிலையில், உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்து மகப்பேற்று விடுதி பகுதியில் போராட்டம் நடத்தியதால் அங்கு பதட்டமான நிலையும் ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற மன்னார் நீதிவான் இருவரது சடலங்களையும் பிரதே பரிசோதனைக்காகவும் மேலதிக விசாரணைகளுக்காகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.இவ்வாறானதொரு சூழ்நிலையில் இருவரது மரணங்கள் தொடர்பில் மக்கள் மத்தியிலும் பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மன்னார் பொது வைத்தியசாலை மீதான நம்பிக்கையையும் மக்கள் இழக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

இதற்கு முன்னரும் இதே வைத்தியசாலையில் சிந்துஜா என்ற இளம் தாய் மரணமடைந்தமை தொடர்பிலும் வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு தற்போது இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றுள்ளது.எனவே, தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் ஏன் இடம்பெறுகின்றன. என்பதனை மத்திய சுகாதார அமைச்சு மட்டத்திலும் விசாரணை செய்து குற்றவாளிகளாகக் காணப்படுவோரை தண்டிக்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு செய்வதால் மட்டும் எதிகாலத்தில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறாது தடுக்க முடியுமென தான் நம்புவதாகவும் சுகாதார அமைச்சருக்கு ரிஷாத் பதியுதீன் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்..

தொடர்புடைய செய்திகள்

விமானங்கள் கொள்வனவு விவகாரம் – நாமலை சந்தேகநபராக பெயரிட ஆலோசனை
அண்மைய செய்திகள்

விமானங்கள் கொள்வனவு விவகாரம் – நாமலை சந்தேகநபராக பெயரிட ஆலோசனை

புரட்டாதி 12, 2026
மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட  ஊக்குவிப்பு கொடுப்பனவு
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்குவிப்பு கொடுப்பனவு

புரட்டாதி 12, 2026
தவறான வீட்டை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல்?
அண்மைய செய்திகள்

தவறான வீட்டை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல்?

புரட்டாதி 12, 2026
பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் பல பகுதிகளில் இன்று மழை
அண்மைய செய்திகள்

பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் பல பகுதிகளில் இன்று மழை

புரட்டாதி 12, 2026
வவுனியாவில் பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் பொலிசார் குவிப்பு
அண்மைய செய்திகள்

வவுனியாவில் பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் பொலிசார் குவிப்பு

புரட்டாதி 12, 2026
பேராசிரியர் ரகுராம் வழக்கு – நவம்பர் மாதத்திற்கு
அண்மைய செய்திகள்

பேராசிரியர் ரகுராம் வழக்கு – நவம்பர் மாதத்திற்கு

புரட்டாதி 12, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் மகாகவி பாரதியாரின் 105ஆவது நினைவு தினம்

வவுனியாவில் மகாகவி பாரதியாரின் 105ஆவது நினைவு தினம்

2 நாட்கள் முன்னர்
பண்பாட்டு மரபுகளை பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கும் – கடற்றொழில் அமைச்சர்

பண்பாட்டு மரபுகளை பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கும் – கடற்றொழில் அமைச்சர்

6 நாட்கள் முன்னர்
பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் பல பகுதிகளில் இன்று மழை

பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் பல பகுதிகளில் இன்று மழை

15 மணத்தியாலங்கள் முன்னர்
மட்டக்களப்பில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

15 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற கர்நாடக பக்தி இசை நிகழ்ச்சி

யாழில் இடம்பெற்ற கர்நாடக பக்தி இசை நிகழ்ச்சி

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In