மன்னார் மாவட்டச் செயலகத்தில் நாளைய தினம் புதன்கிழமை நடைபெறவிருந்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான நடமாடும் சேவையானது, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும், புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.