நெடுந்தீவில் இருந்து 03 நோயாளர்கள் உலங்குவானூர்தி மூலம் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பணத்திற்கு கொண்டுவரப்பட்டார்கள்.
தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக நெடுந்தீவில் இருந்து இன்றைய தினம் 03 நோயாளர்கள் விமானப் படையினரின் ஒத்துழைப்புடன் உலங்குவானூர்தி மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.





