EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மன்னாரிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி நிதிகள் திடீர் விஜயம்.

மன்னாரிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி நிதிகள் திடீர் விஜயம்.

மார்கழி 21, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் இன்றைய தினம் சனிக்கிழமை(21) மதியம் மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் விசேட சந்திப்பு இடம்பெற்றது.

-மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் சிவில் சமூக செயற்பாட்டளர்கள் ஒன்றிணைக்கப்பட்டு,மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்பு, படையினர் வசம் காணப்படும் மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை, காற்றாலை மற்றும் கனிய மண் அகழ்வினால் மன்னார் தீவில் ஏற்பட்டு வரும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி நிதிகள் கேட்டறிந்து கொண்டனர்.

மேலும் மன்னாரில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு,அவற்றை நிவர்த்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் பொலிஸாரின் தடுப்பில் வைக்கப்படும் சந்தேக நபர்களை நேரடியாக சென்று சந்திக்க கூடிய செயற்பாடுகளை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் முள்ளிக்குளம் பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது முள்ளிக்குளம் பகுதியில் பல வருடங்களாக மக்களின் காணிகளில் கடற்படையினர் நிலை கொண்டுள்ளமை குறித்து ஆராய்ந்துள்ளதோடு யுத்தம் முடிவடைந்து இன்று 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் கடற்படையினர் குறித்த மக்களின் காணிகளை விடுவிக்காமை குறித்தும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி நிதிகள் நேரடியாக ஆராய்ந்துள்ளனர்.

மேலும் முள்ளிக்குளம் மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள்,அவர்கள் முகம் கொடுத்து வருகின்ற சவால்கள்,முள்ளிக்குளம் ஆலயத்திற்கு மக்கள் சென்று வருவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்தனர்.

குறிப்பாக முள்ளிக்குளம் மக்களின் காணிகள் , அரச கட்டுப்பாட்டில் உள்ளமை குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மன்னார் தீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு குறித்தும் நேரடியாக பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராயும் குழு இன்று கூடுகின்றது
அண்மைய செய்திகள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராயும் குழு இன்று கூடுகின்றது

வைகாசி 20, 2025
முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு
அண்மைய செய்திகள்

முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

வைகாசி 20, 2025
தேசிய மக்கள் சக்திக்கு கைகொடுக்க சுயேச்சைக் குழுக்கள் தீர்மானம்
அண்மைய செய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கு கைகொடுக்க சுயேச்சைக் குழுக்கள் தீர்மானம்

வைகாசி 20, 2025
குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்
அண்மைய செய்திகள்

குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்

வைகாசி 20, 2025
தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….
அண்மைய செய்திகள்

தலைமன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு….

வைகாசி 19, 2025
அண்மைய செய்திகள்

யாழில்.தனியார் தங்குமிடத்தில் யுவதி குளிப்பதை காணொளி எடுத்தவர் கைது….

வைகாசி 19, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

வேர்க்கடலையைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

வேர்க்கடலையைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

7 நாட்கள் முன்னர்
கல்கிசை துப்பாக்கிச் சூடு சம்பவ மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது

கல்கிசை துப்பாக்கிச் சூடு சம்பவ மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது

4 நாட்கள் முன்னர்
இவ்வருடத்தில் வாகன விபத்துகளில் 975 பேர் பலி

இவ்வருடத்தில் வாகன விபத்துகளில் 975 பேர் பலி

4 நாட்கள் முன்னர்
Apple Watch Ultra 3 எப்போது வெளியாகும் !

Apple Watch Ultra 3 எப்போது வெளியாகும் !

6 நாட்கள் முன்னர்
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 15 மே 2025

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In